Homepage

Homepage

விவசாயப் பழமொழிகள்

தவளை கத்தினால் மழை 

அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

தும்பி பறந்தால் தூரத்தில் மழை

எறும்பு ஏறில் பெரும் புயல் 

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

தை மழை நெய் மழை

மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

புற்று கண்டு கிணறு வெட்டு

வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

காணி தேடினும் கரிசல் மண் தேடு

களர் கெட பிரண்டையைப் புதை 

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

ஆடிப்பட்டம் பயிர் செய் 

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

களரை நம்பி கெட்டவனும் இல்லை
மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

கூளம் பரப்பி கோமியம் சேர் 

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

விதை பாதி வேலை பாதி

காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

ஆடி ஐந்தில் விதைத்த விதையும்
புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும்
பெரியோர்கள் வைத்த தனம் 

கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.

அடர விதைத்தால் போர் உயரும் 


No comments:

Post a Comment

Contact Us

Name

Email *

Message *